Sunday, 31 May 2009

Privacy Policy


Privacy Policy

Privacy Statement


Privacy Statement for veg-non-veg-food-recipe.blogspot.கம

-non-veg-food-recipe.blogspot.com has created this privacy statement in order to demonstrate our firm commitment to privacy. The following discloses the information gathering and dissemination practices for this Web site:



-non-veg-food-recipe.blogspot.com Information Automatically Logged

We use your browser type, or the type of computer operating system you use (Macintosh or Windows, for example) and IP address only for statistical purposes.



Advertisers

We use few outside ad companies to display ads on our site. These ads may contain cookies, cookies received with banner ads are collected by our ad companies, and we do not have access to this information.



Personal Information

This Web site does not request any personal information or collect any information that personally identifies you or allows you to be personally contacted. Since we do not collect any personal information on this Web site, we do not share any personal information with any third parties nor do we use any personal information for any purposes.



External Links

This site contains links to other sites, Veg-non-veg-food-recipe.blogspot.com/ is not responsible for the privacy practices or the content of such web sites.



Contacting the Web Site

If you have any questions about this privacy statement, the practices of this site, or your dealings with this Web site, you can contact us using this email: Bangaloretamilan@Gmail.com

Monday, 23 February 2009

சிக்கன் ஷெரின்

சிக்கன் ஷெரின்

தேவையான பொருட்கள்:

கோழி - 1
நெய் - கால் கப்
சிக்கன் ஸ்டாக் - 2 கப்
சோளமாவு - 2 மேசைக்கரண்டி
பூண்டு - 6 பல்
அன்னாசி - ஒரு துண்டு
சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி
மிளகுத்தூள் - அரைத்தேக்கரண்டி
இஞ்சி - அரை அங்குலத்துண்டு
பிஸ்தா - சிறிது
பாதாம் - சிறிது
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இஞ்சி பூண்டினை தோல் நீக்கி நறுக்கிக் கொள்ள வேண்டும். அன்னாசியையும் ஒரு அங்குலத் துண்டுகளாக நறுக்க வேண்டும். கோழிக்கறியினை சுத்தம் செய்து, எலும்புகள் நீக்கி நீளவாக்கில் துண்டங்களாக நறுக்கிக் கொள்ள வேண்டும். சிக்கன் ஸ்டாக் தயாரிக்க, கோழி எலும்புகள், நறுக்கின வெங்காயம் சிறிது, ஒரு தேக்கரண்டி மிளகுத்தூள், எலுமிச்சை சாறு 2 தேக்கரண்டி, சிறிது உப்பு, இரண்டு கப் தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் மிதமான தீயில் வேக வைத்து, பிறகு நீரினை தனியே வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

எலும்பு நீக்கி துண்டுக்களாக்கி வைத்துள்ள கோழிக்கறியினை தனியே குக்கரில் கால் மணி நேரம் போதுமான நீர் ஊற்றி வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையெனில் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். வாணலியில் நெய் விட்டு சூடேறியதும் கோழித்துண்டங்களைப் போட்டு பொன்னிறமாக வேகவைத்து எடுத்து தனியே ஒரு தட்டில் வைக்க வேண்டும்.

அதே நெய்யில் நறுக்கின பூண்டு, இஞ்சியினைச் சேர்த்து நன்கு வதக்கி எடுத்து வைத்துள்ள சிக்கன் மீது ஊற்ற வேண்டும். மீண்டும் வாணலியில் சிக்கன் ஸ்டாக்கினை ஊற்றி வேகவைக்கவும். அத்துடன் தேவையான உப்பு, மிளகுத்தூள், சோளமாவு சேர்த்து நன்கு விடாது கலக்கி குழம்பு கெட்டியாக வரும் வரை வேகவைக்க வேண்டும். பிறகு அன்னாசி துண்டங்களைச் சேர்த்து கலக்கி சிக்கன் மீது ஊற்றி, பாதாம், பிஸ்தா தூவி பரிமாற வேண்டும்.

டாங்டி கபாப்

டாங்டி கபாப்

தேவையான பொருட்கள்:

சிக்கன் ட்ரம்ஸ்டிக்ஸ் - 8
எலுமிச்சை சாறு - ஒரு மேசைக்கரண்டி
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
பூண்டு - 6 பல்
பச்சை மிளகாய் - 4
தயிர் - ஒரு கப்
கடலை மாவு - 2 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு மேசைக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
சாட் மசாலாத்தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


செய்முறை:

• சிக்கன் ட்ரம்ஸ்டிக்ஸ் என்றால் கோழியின் தொடைப் பகுதி இல்லாத கால் துண்டங்கள் ட்ரம்ஸ்டிக்ஸ் என்றழைக்கப்படும். ஒரு முனையில் சதைப் பகுதி உருண்டையாய் குவிந்த நிலையிலும், மறுமுனையில் மூட்டு இணைப்பு எலும்புமாக பார்பதற்கு ட்ரம்ஸ் வாசிக்க உதவும் குச்சியினைப் போன்று இருக்கும்.

• கால் துண்டங்களை நன்கு கழுவி, கொழுப்புகளையும், மேல் உள்ள தேவையற்ற தோலையும் நீக்கி விட வேண்டும்.

• சுத்தம் செய்த துண்டங்களை நன்கு துடைத்து, நீர் இல்லாமல் செய்து, அதன் மேல் கத்தி கொண்டு இரண்டு மூன்று வெட்டுகள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அவற்றை எலுமிச்சை சாற்றில் நன்கு பிரட்டி, ஊற விட வேண்டும்.

• இஞ்சி, பூண்டு தோலுரித்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். மிளகாயின் தண்டுபாகத்தினை நீக்கி, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

• ஒரு மெல்லிய (மஸ்லின்) துணியில் தயிரினைக் கட்டித் தொங்க விட்டு, அதில் உள்ள அதிகப்படியான நீரையெல்லாம் வடித்துவிட வேண்டும்.

• கடலை மாவினை குறைந்த தீயில் ஒரு அடிப்பிடிக்காத வாணலியில் இட்டு, தொடர்ச்சியாக கிளறிய வண்ணம் வறுத்துக் கொள்ள வேண்டும்.

• பிறகு அதனை எடுத்து ஆறவிட்டு, தயிர், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், கரம் மசாலாத் தூள், மிளகாய்த் தூள், உப்பு மற்றும் நறுக்கின பச்சை மிளகாய் ஆகியவற்றுடன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

• இந்த கலவையை கோழியின் கால்துண்டங்கள் மீது நன்கு பூசி, சுமார் இரண்டு மணி நேரங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து ஊற விட வேண்டும்.

• பிறகு எடுத்து, தந்தூரி அடுப்பில், மிதமான சூட்டில், அனைத்துப் பக்கங்களும் ஒரே அளவில் வேகுமாறு தணலில் சுட்டெடுக்க வேண்டும்.

• இதையே 220 டிகிரி C க்கு சூடேற்றப்பட்ட ஓவனில் சுமார் ஐந்து நிமிடங்கள் வைத்து வேகவிட்டு, பிறகு ஓவனின் வெப்பநிலையை 180 டிகிரி C க்கு குறைத்து மேலும் 15 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்க வேண்டும்.

• எல்லாப்புறமும் நன்கு வெந்துள்ளதா என்று பார்த்து, சாட் மசாலாத்தூள் தூவிப் பரிமாற வேண்டும்.

மட்டன் போப்ளா

மட்டன் போப்ளா

தேவையான பொருட்கள்:

மட்டன் - கால் கிலோ
சிவப்பு பூசணி (போப்ளா) - கால் கிலோ
பச்சைமிளகாய் - 2
தயிர் - அரை கப்
வெங்காயம் - 150 கிராம்
கரம் மசாலாத்தூள் - 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரைத் தேக்கரண்டி
பூண்டு - 6 பல்
இஞ்சி - ஒரு அங்குலத்துண்டு
பிரிஞ்சி இலை - 1
நெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஆட்டுக்கறியைச் சுத்தம் செய்து ஒரு அங்குலத் துண்டுகளாய் நறுக்கிக் கொள்ள வேண்டும். நறுக்கிய துண்டங்களை தயிரில் சுமார் ஒரு மணிநேரம் ஊறவிட வேண்டும். வெங்காயம், இஞ்சி, பூண்டு, மஞ்சள்தூள் மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் நெய் விட்டு சூடானதும் அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு நன்கு சிவக்க வதக்க வேண்டும். சிவந்ததும் அதனுடன் கரம் மசாலா பொடியைச் சேர்க்க வேண்டும்.

பிரிஞ்சி இலை, முழு பச்சைமிளகாய் மற்றும் தயிரில் ஊறிய மட்டன் ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். மட்டன் நன்கு சிவக்கும் வரை வேகவைத்து பிறகு தண்ணீர் சேர்த்து குறைந்த தீயில் வேகவிட வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் பூசணிக்காயைத் தோல் செதுக்கி வேகவைத்து எடுத்து நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். மசித்து வைத்துள்ள பூசணிக்காயை வெந்துகொண்டிருக்கும் கறியுடன் சேர்த்து குழம்பு கெட்டியாகும் வரை வேகவிட வேண்டும். குழம்பு கெட்டியாகி வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்க வேண்டும்.

நண்டு வறுவல்

நண்டு வறுவல்

தேவையான பொருட்கள்:

நண்டு - அரை கிலோ
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - கால் கப்
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - 4
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - கால் கப்
கடுகு - அரை தேக்கரண்டி


செய்முறை:

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். நண்டின் ஓட்டை நீக்கி விட்டு சுத்தமாக கழுவி தண்ணீரை வடித்துக் கொள்ள வேண்டும் பிறகு சுத்தம் செய்த நண்டில் நறுக்கிய வெங்காயத்தில் பாதி சேர்த்து பிறகு பாதி எண்ணெய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு பிசறி அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

வாணலியில் மீதி எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து கொண்டு பிறகு உளுத்தம் பருப்பை போட்டு சிவக்க வதக்க வேண்டும். சிவந்ததும் மீதி இருக்கும் வெங்காயம் சேர்த்து வதக்கி விட்டு பிறகு நண்டை போட்டு வேக விட வேண்டும். நண்டு சிவந்து வந்ததும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கி விட வேண்டும்.

நண்டு தக்காளி சூப்

நண்டு தக்காளி சூப்

தேவையான பொருட்கள்:

பெரிய நண்டு - 2
தக்காளி விழுது - அரை கப்
வெங்காயம் - ஒன்று
முட்டை - 2
சிக்கன் ஸ்டாக் - ஒரு கட்டி
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
மிளகு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


செய்முறை:

முதலில் நண்டின் ஓட்டை எடுத்து கழுவி சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ள வேண்டும். வெந்த நண்டின் சதை பகுதியை ஒரு பாத்திரத்தில் போட்டு உதிர்த்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சியை தோல் நீக்கி விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

வெந்நீரில் சிக்கன் ஸ்டாக் கட்டியை கரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தக்காளி விழுது, நறுக்கிய வெங்காயம், இஞ்சி விழுது, உதிர்த்த நண்டு கறி, உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். 5 நிமிடம் வெந்த பிறகு கரைத்த சிக்கன் ஸ்டாக், மிளகுத் தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு அதில் அடித்த முட்டையை மெதுவாக வடிகட்டி சேர்த்துக் கலக்க வேண்டும்.

வஞ்சிர மீன் குழம்பு

வஞ்சிர மீன் குழம்பு

தேவையான பொருட்கள்:

வஞ்சிர மீன் – 750 கிராம்
சின்ன வெங்காயம் - ஐம்பது கிராம்
கறிவேப்பிலை - 2 கொத்து
சீரகம் - கால் டீ ஸ்பூன்
வெந்தயம் - ஒரு டீ ஸ்பூன்
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 5
புளி - கைப்பிடியளவு
மஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன்
எண்ணை - 4 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் - ஏழு
மல்லி விதை - ஒரு டேபிள் ஸ்பூன்
சோம்பு - ஒரு டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் மீனை சுத்தம் செய்து சிறிய துண்டுளாக நறுக்கி உப்பு போட்டு பிசறி நன்கு கழுவி வைக்க வேண்டும். வர மிளகாய், மல்லி, சோம்பு மூன்றையும் பத்து நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி இரண்டு டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து நைஸான விழுதாக அரைத்து வைக்க வேண்டும். வெங்காயத்தில் இரண்டை எடுத்து வைத்து விட்டு மற்றதை தோலுறித்து இரண்டாகவும், தக்காளிகளை நான்காகவும் நறுக்க வேண்டும். பச்சை மிளகாயை நடுவில் கீறி வைக்க வேண்டும்.

புளியை மூன்று டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி அரைத்த விழுதையும் போட்டு கரைத்து வைக்க வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து வெந்தயம் போட்டு வாசனை வந்ததும் வெங்காயம், ப. மிளகாய், கறிவேப்பிலை போட்டு மூன்று நிமிடம் வதக்க வேண்டும். பின் தக்காளி, ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து மூன்று நிமிடம் வதக்க வேண்டும். இப்போது புளிக் கரைசலை ஊற்றி சிறிது கெட்டியாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

பின் மீன் துண்டங்களைப் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும். சீரகத்தை நன்றாகத் தட்டி பிறகு இரண்டு வெங்காயத்தையும் வைத்து லேசாகத் தட்டி குழம்பில் போட்டு மூடி பத்து நிமிடம் கழித்து திறந்து லேசாக கிண்டி விட வேண்டும்.